முகப்பு
உலகம்

உலகில் 4-ஆம் இடம்: மெக்சிகோவில் கரோனா பலி 44 ஆயிரத்தைத் தாண்டியது!

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொற்றுக்கு 342 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:01 PM
கோப்புப்படம்
பகிர்:

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 342 பேர் பலியாகியுள்ளனர். 

மெக்சிகோவில் இன்றைய கரோனா பாதிப்பு குறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:

மெக்சிகோவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,973 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3,95,489 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோன்று, மேலும் 342 பேர் பலியாகியுள்ளதையடுத்து, அந்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44,022 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் 2.56 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில், முதல் மூன்று இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன் உள்ளதை அடுத்து, 4 ஆம் இடத்தில் மெக்சிகோ உள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →