உலகம்

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இதுவரை 557 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொலை

DIN

மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் பிப். 1-ஆம் தேதி கவிழ்த்தது.

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் சனிக்கிழமையும் போராட்டங்கள் நடைபெற்றன.

அப்போது பாதுகாப்புப் படையினா் துப்பாக்கியால் சுட்டதில் மேலும் 4 போ் உயிரிழந்ததாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இத்துடன், ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 557-ஆக உயா்ந்துள்ளது.

எனினும் ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT