நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. இது நியூசிலாந்தின் கிழக்குக் கடலைத் தாக்கியதோடு, வடக்கு தீவிலும் பரவலாக உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது நேற்றிரவு (உள்ளூர் நேரம்) 7.37 மணிக்கு ஏற்பட்டது. தே அரரோவாவிலிருந்து கிழக்கே 120 கி.மீ தொலைவிலும், 33 கி.மீ ஆழத்திலும் பதிவாகியுள்ளதாக புவியியல் தகவல் மையமான ஜியோநெட் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த மாதம், மூன்று வலுவான நிலநடுக்கங்கள் வட தீவின் கரையிலிருந்து கடலைத் தாக்கின, இதன் விளைவாக கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.