பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலி
பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் கரோனாவுக்கு ஒரேநாளில் 4,249 பேர் பலியாகியுள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. உலக அளவில் கரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் பிரேசில் 2ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பிரேசிலில் கரோனாவுக்கு 4,249 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,45,025ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு ஒரேநாளில் புதிதாக 86,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 1,32,79,857ஆக உயர்ந்துள்ளது.