முகப்பு
உலகம்

எகிப்தில் ரயில் தடம்புரண்டு விபத்து: 15 பேர் காயம்

எகிப்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் 15 பேர் காயமடைந்தனர்.  

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:01 PM
கோப்புப் படம்.
பகிர்:

எகிப்தில் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானத்தில் 15 பேர் காயமடைந்தனர். 
எகிப்து நாட்டின் ஜகஜிக் நகரில் இருந்து ரயில் ஒன்று தலைநகர் கெய்ரோ நோக்கி நேற்று புறப்பட்டது. இந்த ரயில் ஷர்கியா மாகாணத்தில் திடீரென தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். 
காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் தெரிவரவில்லை. 
முன்னதாக கடந்த மாதம் எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்குநேர் மோதியதில் 19 பேர் பலியானார்கள். 185 பேர் காயமடைந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.