ரஷியாவில் மேலும் 389 பேர் கரோனாவுக்குப் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 389 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8,632 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 389 பேர் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, புதிதாக 8,632 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 9,321 ஆக இருந்தது. இதையடுத்து மொத்த பாதிப்பு 4,702,101 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,252 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.
ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 389 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி 105,582 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் ரஷியாவில் இதுவரை 4,326,780 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 269,739 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.