உலகளவில் கரோனா பாதிப்பு 14.53 கோடியைத் தாண்டியது
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 14.53 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 14.53 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா பேரிடர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியா, பிரேசில், பிரான்ஸ் நாடுகளில் மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகின்றது.
கரோனா பாதிப்பு குறித்து உலகளவில் புள்ளி விவரங்களை ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டு வருகிறது.
ஓராண்டுக்கும் மேலாக உலக மக்களை துன்பத்தில் ஆழ்த்தி அச்சுறுத்தும் கரோனாவுக்கு உலகம் முழுவதும் இதுவரை 14,53,63,174 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 30,85,826 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 12,33,67,371 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,89,09,977 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 1,10,153 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்தியாவில் மட்டும் இந்த மாதத்தில் இதுவரை 16,26,3,695 லட்சம் பேருக்கு கரோனா பாதித்துள்ளது.