உலகம்

ரஷியாவில் புதிதாக 22,589 பேருக்குத் தொற்று; மேலும் 790 பேர் பலி

DIN

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,589 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 790 பேர் பலியாகியுள்ளனர். 

ரஷியாவில் இன்றைய கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,589 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,356,784 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 2,502 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் கரோனாவால் இன்று 790 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 161,715 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 515,227 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 20,096 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,679,842 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT