முகப்பு
உலகம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 2 காவலர்கள் பலி, 13 பேர் காயம்

பாகிஸ்தானில் காவலர்கள் வேன் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியானார்கள்.  

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

பாகிஸ்தானில் காவலர்கள் வேன் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 2 காவலர்கள் பலியானார்கள். 
பாகிஸ்தானின் குவெட்டா நகரில் இன்று மாலை காவலர்கள் வேன் அருகே குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் 2 காவலர்கள் பலியானார்கள். 13 பேர் காயமடைந்தனர். காயமடைந்தர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 
குண்டுவெடிப்பு காரணமாக அருகில் உள்ள கட்டடங்களின் ஜன்னல்களும் சேதமடைந்தன. இதற்கிடையே, இந்த சம்பவத்துக்கு பலுசிஸ்தான் முதல்வர் ஜம் கமல் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

முழு கட்டுரையைப் படிக்க →