பிலிப்பின்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் அதிகாலை 1.16 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
பிலிப்பின்ஸ் நாட்டின் தாவோ பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 1.16 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆகப் பதிவான நிலநடுக்கம் , உருவான இடத்தில் இருந்து 67 கி.மீ தொலைவில் 69 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | இந்தியா தொடர்: இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்குக் கிடைத்த வருமானம் எவ்வளவு?
Advertisement
இதற்கிடையில் தவுலத் மாவட்டத்தில் நடுக்கம் காரணமாக பொதுமக்கள் சிலர் வீட்டை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர் .
மேலும் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் பெரிய அதிர்வுகளை வெளிப்படுத்தாததால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.