முகப்பு
உலகம்

மூன்றாவது தவணை தடுப்பூசிக்கு அனுமதி அளிக்க அமெரிக்கா முனைப்பு

கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு  செலுத்துவதற்கு அமெரிக்க அனுமதி வழங்கவுள்ளது,

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:53 AM
கோப்புப்படம்
பகிர்:

கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு  செலுத்துவதற்கு அமெரிக்க அனுமதி வழங்கவுள்ளது,

டெல்டா வகை கரோனா உலகின் பல்வேறு பகுதிகளில் வேகமாக பரவிவருகிறது. அதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக மூன்றாவது தவணை தடுப்பூசி வழங்க பல்வேறு நாடுகள் திட்டமிட்டுவருகிறது.

இந்நிலையில், கரோனா மூன்றாவது தவணை தடுப்பூசியை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு செலுத்த அமெரிக்க அனுமதி வழங்கவுள்ளது, உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு இந்த மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பட்சத்தில் அது கூடுதல் பயன் தருகிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு மாடர்னா தடுப்பூசியின் மூன்றாவது தவணை அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்குகிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மூன்றாவது தவணைக்கு இன்றே (வியாழன்கிழமை) ஒப்புதல் அளிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முனைப்பு காட்டிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஆகியோரின் உடல்களில் முதல் தவணை தடுப்பூசி போதுமான அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, கரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்குவதில் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments