ஐக்கிய அரபு அமீரகத்தில் அஷ்ரஃப் கனி
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி மற்றும் குடும்பத்தினரை மனிதாபிமான அடிப்படையில் வரவேற்றுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியதையடுத்து, அமெரிக்க ஆதரவு பெற்ற அதிபர் அஷ்ரஃப் கனி நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் அண்டை நாடான தஜிகிஸ்தானில் அவர் தஞ்சம் அடைந்திருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரஃப் கனி மற்றும் அவரது குடும்பத்திரை ஐக்கிய அரபு அமீரகம் வரவேற்றுள்ளதாக அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.