கோப்புப்படம் 
உலகம்

15 மாதங்களுக்கு பிறகு நியூசிலாந்தில் மீண்டும் ஊரடங்கு விதிப்பு

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

DIN

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நியூசிலாந்தில் 15 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பரவல் மீண்டும் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு தழுவிய அளவில் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வைரஸ் அழிக்கப்படும் என அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆறு மாத காலமாக, நியூசிலாந்தில் கரோனா பரவல் இல்லாமல் இருந்தது. இதனிடையே, ஓக்லாந்தை சேர்ந்த ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது இந்த வாரம் உறுதி செய்யப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தென்பட்டுள்ள டெல்டா வகை கரோனாவால் அவர் பாதிக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி, சிட்னியிலிருந்து வந்த ஒருவரிடமிருந்து கரோனா பரவியது ஆய்வில் தெரியவந்தது.

இதுகுறித்து ஆர்டெர்ன் கூறுகையில், "ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த நபர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். எனவே, முதன்மையாக அச்சப்பட்டது போல் அல்லாமல் கரோனா பரவல் சமூக பரவலாக மாறவில்லை. புதிருக்கான விடையை கண்டுபிடித்துள்ளோம்

ஒரே நாள் இரவில் 11 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்

நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்

போளூா் ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் - மாவட்ட திட்ட இயக்குநா் ஆய்வு

மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்

தட்றஅள்ளியில் பழைமையான குத்துக்கல் கண்டுபிடிப்பு

SCROLL FOR NEXT