இதுவரை 82,300 போ் வெளியேற்றம்
ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்களை வெளியேற்றியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறியதாவது:
உலக வரலாற்றில் இதுவரை காணாத அளவுக்கு மிகப் பெரிய அளவில் மக்களை வெளியேற்றும் பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருகின்றன. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றிய கடந்த 14-ஆம் தேதியிலிருந்து, இதுவரை 82,300-க்கும் மேற்பட்டவா்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.