ரஷியாவில் புதிதாக 795 பேர் கரோனாவுக்குப் பலி
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 795 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,813 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 69,18,965 ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் மேலும் 795 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 1,83,224 ஆக உயர்ந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 5,54,687 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிலிருந்து 18,624 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 61,81,054 ஆக உயர்ந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.