இந்தோனேசியா: எரிமலை வெடிப்பில் 3,000 வீடுகள் சேதம், 15 பேர் பலி 
உலகம்

இந்தோனேசியா: எரிமலை வெடிப்பில் 3,000 வீடுகள் சேதம், 15 பேர் பலி

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

DIN

இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியதில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் செமேரு எரிமலை உள்ளது. இந்த எரிமலை நேற்று முன் தினம்(டிச.4) திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. 

இச்சம்பவத்தில் அப்பகுதியில் உள்ள கிராமவாசிகள் 15 பேர் உயிரிழந்ததோடு , 27 பேர் மாயமாகியிருக்கிறார்கள். 

மேலும் எரிமலை அருகே இருந்த 3,000-க்கு மேற்பட்ட வீடுகளும் , 38 பள்ளிகளும் சேதமடைந்தன. 

இரண்டு நாள்களாக நடைபெற்று வரும் மீட்புப் பணியில்  எரிமலை அருகே வசித்தவர்கள் பலர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

இதுவரை 15 பேர் உடல்களை மீட்டுப் பணியில் ஈடுபட்டவர்கள் மீட்டுள்ளனர். 100 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
அவர்களில் 57 பேர் தீக்காயங்களுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT