முகப்பு
உலகம்

பிரிட்டன்: ஜனவரிக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி தொற்று

 பிரிட்டனில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:40 AM
பகிர்:

 பிரிட்டனில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய புதிய உச்சத்தைத் தொட்டது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 58,194 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இது, கடந்த ஜனவரி மாதத்துக்குப் பிந்தைய அதிகபட்ச தினசரி பாதிப்பு எண்ணிக்கையாகும். இத்துடன், 1,07,19,165 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 120 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,46,255-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் சனிக்கிழமை நிலவரப்படி, 94,14,117 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 11,58,793 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 900 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.