முகப்பு
உலகம்

ஆப்கனில் தலிபான்-பாதுகாப்புப் படையினரிடையே மோதல்: 26 பேர் பலி

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே நடைபெற்ற மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள கானாபாத் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தலிபான் அமைப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 10 தலிபான் கிளர்ச்சியாளர்கள் உள்பட 26 பேர் பலியாகினர். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.