பாகிஸ்தானில் கரோனா பலி 12 ஆயிரத்தைக் கடந்தது!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் பலியானதை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் பலியானதை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,037 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 555,511 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 59 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 12,026 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 511,502 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 31,983 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,538 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மாகாணவாரியாக பாதிப்பு
சிந்து - 2,51,047, பஞ்சாப் - 1,60,935 , கைபர்-பக்துன்க்வா- 68,531, இஸ்லாமாபாத் - 41,994, பலுசிஸ்தான்- 18,869, கில்கித்-பல்திஸ்தான்- 4,916 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 9,219 பேர்.