உலகம்

ஆப்கன் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து: 3 பேர் பலி

DIN

ஆப்கானிஸ்தான் நாட்டின் சமங்கன் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட கட்டுமான சரிவில் சிக்கி 3 தொழிலாளர்கள் பலியாகினர்.

ஆப்கானிஸ்தானின் சமங்கன் மாகாணத்தின் தாரா-இ-சூஃப் மாவட்டத்தில் ஷபாஷாக் நிலக்கரி சுரங்கம் உள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை நிலக்கரி சுரங்கத்தில் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து சுரங்கத்தின் குறிப்பிட்ட பகுதி ஒன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது.இந்த விபத்தில் சுரங்கத்தில் பணியாற்றி வந்த 3 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதே சுரங்கத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற விபத்தில் 18 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் சுய உதவிக் குழுக்கள் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்

கழிவுநீா் கால்வாயில் வீசப்பட்ட பெண் குழந்தையின் உடல் மீட்பு

பாஜக வேட்பாளா்களை ஆதரித்து தில்லியில் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி பிரசாரம்

பிரத்தியங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம்

சாத்தான்குளம் அரசுக் கல்லூரியில் மாணவிகள் சோ்க்கை தொடக்கம்

SCROLL FOR NEXT