உலகம்

ஆப்கனில் தலிபான் தாக்குதல்: தளபதி உள்பட 6 காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொலை

ANI

கிழக்கு ஆப்கானிஸ்தானின், நங்கர்ஹார் மாகாணத்தில் தலிபான் நடத்திய தாக்குதலில் தளபதி உள்பட ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். 

நங்கர்ஹார் மாகாணத்தின் பாடிகோட் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கிருந்து தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதலுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் வகையில் காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். 

இந்த தாக்குதலில் தளபதி தாஹிர்கான் உள்பட 6 உள்ளூர் காவல்துறையினர் கொல்லப்பட்டனர் மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

கட்டாரி தலைநகர் தோஹாவில் அரசாங்கத்திற்கும் தலிபான் பிரதிநிதிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த போதிலும் வன்முறை மோதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT