அமெரிக்காவில் 2.09 கோடியைத் தாண்டியது கரோனா தொற்று
அமெரிக்காவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,09,04,701 கோடியைத் தாண்டியது.
அமெரிக்காவில் கரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. உலகளவில் கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அந்நாட்டில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 9 லட்சத்து 4 ஆயிரத்து 701 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு கலிஃபோர்னியா, டெக்சாஸ், ஃப்ளோரிடா போன்ற மாகாணங்களில் மிகவும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 58 ஆயிரத்து 682 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாத இறுதியில் ஒரு கோடியாக இருந்த தொற்று பாதிப்பு இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.