முகப்பு
உலகம்

இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை

பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

Updated On : 8 ஜனவரி, 2021 at 2:52 PM
இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை
பகிர்:


காத்மாண்டு: பறவைக் காய்ச்சல் அச்சத்தால் இந்தியாவிலிருந்து கோழி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.

இந்தியாவிலிருந்து கோழி உள்ளிட்ட பண்ணைப் பொருள்கள் அனைத்தின் இறக்குமதியையும் நிறுத்தி வைத்து நேபாளம் உத்தரவிட்டுள்ளது. இந்த தடை உத்தரவு வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலிருந்து வரும் அனைத்து விதமான பண்ணைப் பொருள்களையும் எல்லையிலேயே நிறுத்துமாறு அதிகாரிகளுக்கு நேபாளத்தின் வேளாண் மற்றும் கால்நடைகள் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

அதேநேரம், நேபாளம் - இந்தியா எல்லைப் பகுதியில் திறந்தவெளியில் பண்ணைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதையும் நிறுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.