உலகம்

தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்த பிரிட்டன் பிரதமர்

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.

பொங்கல் தினத்தையொட்டி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

தனது சுட்டுரைப் பதிவில், “பிரிட்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தாய் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT