பொங்கல் பண்டிகையையொட்டி பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தை திங்கள் முதல் நாளான இன்று அதிகாலை முதலே விவசாய பெருமக்கள் வீடுகளில் வண்ணத் தோரணங்களைக் கட்டி புதுப் பானையில் பொங்கலிட்டு சூரிய பகவானை வணங்கினர்.
பொங்கல் தினத்தையொட்டி உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தமிழர்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தனது சுட்டுரைப் பதிவில், “பிரிட்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு மகிழ்ச்சியான தாய் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.