இந்தோனேசியாவில் ஒரேநாளில் 11,788 பேருக்கு கரோனா; 171 பேர் பலி
இந்தோனேசியாவில் ஒரேநாளில் 11,788 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் ஒரேநாளில் 11,788 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 11,788 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தலைநகர் ஜகார்டாவில் அதிகபட்சமாக 3,512 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,89,262ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கரோனாவுக்கு ஒரேநாளில் மேலும் 171 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 27,835ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 7,751 பேர் குணமடைந்தனர்.
இதனால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,98,810ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் நாடுமுழுவதும் 34 மாகாணங்களில் கரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.