இந்தோனேசியாவில் கரோனாவுக்கு இதுவரை 647 மருத்துவ பணியாளர்கள் பலி
இந்தோனேசியாவில் கரோனாவுக்கு இதுவரை 647 மருத்துவ பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் மருததுவ சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கரோனாவுக்கு இதுவரை 647 மருத்துவ பணியாளர்கள் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் மருததுவ சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டின் மருத்துவ சங்கம் தரப்பில் தெரிவிக்கையில், மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்திற்கும் குறைவாக கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதில் 289 மருத்துவர்கள், 27 பல் மருத்துவர்கள், 221 செவிலியர்கள் உள்ளிட்ட 647 மருத்து பணியாளர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக கிழக்கு ஜாவாவில் 188 பேர் பலியாகியுள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவை பொறுத்தவரை 43 மருத்துவர்கள், 10 பல் மருத்துவர்கள், 25 செவிலியர்கள் என பலியாகியுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோசேசியாவில் இதுவரை 10,24,298 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
28,855 பேர் கரோனாவால் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.