உலகம்

ஜெர்மனி தொழிற்சாலையில் தீவிபத்து: நகரைச் சூழ்ந்த கரும்புகை

DIN

ஜெர்மனியில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

ஜெர்மனியில் உள்ள லெவர்குசன் நகரத்தில் வேதியியல் தொழிற்சாலையில் செவ்வாய்க்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த தீடீர் வெடிவிபத்தால் கரும்புகை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த விபத்தில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒருவர் பலியானார். மேலும் 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இது தொடர்பாக பேசிய பேரிடர் மேலாண்மைத் துறை இந்த விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் ஆபத்தானது என தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் குளிரூட்டியில் ஏற்பட்ட இந்த வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

SCROLL FOR NEXT