உலக சுகாதார அமைப்பு 
உலகம்

டெல்டா வகையால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை: உலக சுகாதார அமைப்பு

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கரோனாவால் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

DIN

மத்திய கிழக்கு நாடுகளில் டெல்டா வகை கரோனாவால் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவருகிறது. முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவேளை உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவில்லை என அடுத்தடுத்த அலை உருவாகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது.

இந்நிலையில், டெல்டா வகை கரோனாவால் மத்திய கிழக்கு நாடுகளில் நான்காம் அலை உருவாகியுள்ளது என உலக சுகாதார அமைப்பு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட தீவிரமாக பரவக்கூடிய கரோனா வகை 22 மத்திய கிழக்கு நாடுகளில் 15க்கு பரவியுள்ளது. மொரோக்கோ தொடங்கி பாகிஸ்தான் வரை பரவியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் டெல்டா வகை கரோனாவால் பரவல் அதிகரித்துள்ளது. பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை. இப்பகுதிகளில் நான்காம் கரோனா அலை பரவிவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்தது வேலூா் அரசு பன்நோக்கு மருத்துவமனை

தமிழக - ஆந்திர வனப்பகுதியில் பலத்த மழை; பாலாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு!

மாற்றுத்திறனாளிகளுக்கு புதன், வெள்ளிக்கிழமைகளில் மருத்துவ முகாம்கள்

ரவணசமுத்திரத்தில் தெருக்களுக்கு பெயா் மாற்றம்: கிராமசபைக் கூட்டத்தில் தீா்மானம்

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

SCROLL FOR NEXT