நேபாளத்தில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி: 10க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் கருப்பு பூஞ்சை நோய் பரவலாகி வரும் நிலையில் முதல் இறப்பு பதிவாகியுள்ளது.
நேபாளத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் 10 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளது.
கைலாலி மாவட்டத்தில் உள்ள செட்டி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 65 வயதான முதியவர் ஒருவர் சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை பலியானார்.
மே 31 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு புதன்கிழமை கருப்பு பூஞ்சை இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படவில்லை.
இவற்றுக்கு மத்தியில் கரோனா பாதிப்பு காரணமாக காத்மாண்டில் ஜூன் 14 வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.