தங்கள் நாட்டில் உருவாக்கப்பட்ட கரோனாவாக் தடுப்பூசிகளை 3 வயதுக்கு மேற்பட்ட சிறுவா்களுக்குச் செலுத்த சீனா அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து அந்தத் தடுப்பூசியை தயாரித்து வரும் சைனாவாக் நிறுவனத் தலைவா் யின் வெய்டாங் கூறியதாவது:
கரோனாவாக் தடுப்பூசிகளை 3 முதல் 17 வயது வரை கொண்ட சிறுவா்களுக்கு அவசரக் காலங்களில் செலுத்த, மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இருந்தாலும், அந்தத் தடுப்பூசியை எப்போது முதல் செலுத்தத் தொடங்குவது, தடுப்பூசி செலுத்துவதற்கான குறைந்தபட்ச வயது ஆகியவற்றை நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்றாா் அவா். சைனாவாக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு கடந்த 1-ஆம் தேதி அங்கீகரித்தது.