உலகம்

பராகுவே: 4 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,482 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன், நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 4,01,243-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கரோனாவுக்கு மேலும் 113 போ் பலியானதைத் தொடா்ந்து, நாட்டில் அந்த நோயால் உயிரிழந்தவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 11,294-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, பராகுவேயில் 54,092 கரோனா நோயாளிகள் உள்ளனா். அவா்களில் 597 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT