ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: ராணுவ வீரர்கள் 6 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தின் கானாபாத் மாவட்டத்தில் தலிபான்கள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆப்கன் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியாகினர். இந்த தேடுதல் நடவடிக்கையில் 5 தலிபான்கள் சிறைபிடிக்கப்பட்டனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஆப்கன் அரசு தெரிவித்துள்ளது.