பிரேசிலில் புதிய உச்சம்: ஒரேநாளில் 3,251 பேர் கரோனாவுக்கு பலி
பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 3,251 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
பிரேசிலில் இதுவரை இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை மட்டும் 3,251 பேர் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
கரோனா தொற்று தொடங்கிய காலத்திலிருந்து முதன்முறையாக ஒருநாள் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் புதிதாக 82,493 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்த நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,21,30,019 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,251 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 2,98,676 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement