கனடாவில் 20-39 வயதுடையவர்களுக்கு புதிய வகை கரோனா தொற்று அதிகரிப்பு 
உலகம்

கனடாவில் 20-39 வயதுடையவர்களுக்கு புதிய வகை கரோனா தொற்று அதிகரிப்பு

கனடாவில் அனைத்து வயதினருக்கு கரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருவதாகத் தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவ

IANS

கனடாவில் அனைத்து வயதினருக்கு கரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருவதாகத் தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார். 

புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, கனடாவில் புதிதாக  2,643 பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு 9,44,962 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22,754 பேர் இதுவரை இறந்துள்ளனர் மற்றும் 8,85,604 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது, 36,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இதுதொடர்பாக டாம் கூறுகையில், 

குறிப்பாக இளம் வயதுடையவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் சமூக இடைவெளியே சரியாக கடைப்பிடிக்காததே காரணமாகும். 

அதிலும் புதியவகை கரோனா தொற்றான SARS-CoV-2 வைரஸ் பரவுவது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கரோனா தொற்று அதிகரித்துவருவதால் பொதுமக்கள் மேலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே தொற்று அதிகரிக்காமல் தடுக்கமுடியும் என்று அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆரை காங்கிரஸ் எதிர்ப்பது ஏன்? பிரதமர் விளக்கம்

என்ஹெச்சிபிசி 2-வது நீர்மின் திட்டம் நாளை மறுநாள் தொடக்கம்!

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT