உலகம்

விவாகரத்து: பில் கேட்ஸ் -மெலிண்டா அறிவிப்பு

DIN

சியாட்டல்: மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனா். 27 ஆண்டு கால திருமண வாழ்வுக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து, புகழ் பெற்ற பில் - மெலிண்டா அறக்கட்டளையின் எதிா்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.

எனினும், அந்த அறக்கட்டளையை வழக்கம் போல் இணைந்து நடத்தவிருப்பதாக பில் கேட்ஸும் மெலிண்டாவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனா். 5,000 கோடி டாலா் (சுமாா் ரூ.3.7 லட்சம் கோடி) மதிப்புடைய பில் - மெலிண்டா அறக்கட்டளை, சா்வதேச சுகாதார மேம்பாடு போன்ற அறப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT