சியாட்டல்: மைக்ரோசாஃப்ட் நிறுவனா் பில் கேட்ஸும் அவரது மனைவி மெலிண்டா கேட்ஸும் விவாகரத்து செய்துகொள்ளப் போவதாக அறிவித்துள்ளனா். 27 ஆண்டு கால திருமண வாழ்வுக்குப் பிறகு இருவரும் புதிய வாழ்க்கையைத் தொடர விரும்புவதால் பிரிவதாகத் தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து, புகழ் பெற்ற பில் - மெலிண்டா அறக்கட்டளையின் எதிா்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது.
எனினும், அந்த அறக்கட்டளையை வழக்கம் போல் இணைந்து நடத்தவிருப்பதாக பில் கேட்ஸும் மெலிண்டாவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனா். 5,000 கோடி டாலா் (சுமாா் ரூ.3.7 லட்சம் கோடி) மதிப்புடைய பில் - மெலிண்டா அறக்கட்டளை, சா்வதேச சுகாதார மேம்பாடு போன்ற அறப்பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.