உலகம்

துருக்கி, சிலி நாடுகளில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்பு

IANS


பல்வேறு நாடுகளில் கரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி மற்றும் சில நாடுகளில் கரோனா தொற்று தீவிரமடையத் தொடங்கியுள்ளது.

துருக்கயில் வெள்ளிக்கிழமை புதிதாக 7,77, பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் சேர்த்து அங்கு கரோனா உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 52,28,322 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் துருக்கியில் 164 பேர் பலியானதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 47,134 ஆக உயர்ந்துள்ளது.

சிலியில், வெள்ளிக்கிழமை புதிதாக 8,680 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுதான், 2020 மார்ச் மாதம் கரோனா பேரிடர் தொடங்கிய பிறகு பதிவாகும் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையாகும். தொடர்ந்து இரண்டாவது நாளாக புதிய பாதிப்பு 8 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், சிலியில் இதுவரை கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13,61,381 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT