முகப்பு
உலகம்

நைஜீரியா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி

நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
நைஜீரியா: கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலி
பகிர்:

நைஜீரியாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 22 பலியாகியிருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த நவ.2 ஆம் தேதி நடந்த இந்த விபத்தில் 9 பேர் பலியானதைத் தொடர்ந்து இடிபாடுகளில் மேலும் சிலர் இருப்பது கண்டறியப்பட்டது. பின் மீட்புப் பணிகளின் மூலம் 22 பேர் வரை பலியாகியிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிற்து.

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் 50 பேர் வரை இருந்த அந்தக் கட்டடத்தில் மேலும் சிலர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.