ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் 
உலகம்

ஜெர்மனியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல்

ஜெர்மனியில்  கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

DIN

ஜெர்மனியில்  கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸானது உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. உலகம் முழுவதும் தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது உலகின் பல நாடுகளிலும் கரோனா பரவல் கட்டுக்குள் வந்தாலும் சில நாடுகளில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஜெர்மனி நாட்டில் தற்போது மீண்டும் கரோனா பரவல் அதிகரித்துவருவது அந்நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கரோனா பேரிடர் அறிவிக்கப்பட்டதிலிருந்து பதிவான தொற்று பரவல் எண்ணிக்கையில் இதுவரை இல்லாத அளவு தினசரி பாதிப்பு பதிவாகியுள்ளது. கரோனா 4ஆம் அலை பரவல் ஏற்பட்டுள்ளதால் ஜெர்மனியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 52,826 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வாரம் தினசரி பாதிப்பு 13 ஆயிரமாக இருந்த நிலையில் தொற்று பரவல் தற்போது புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

மேலும் இதுவரை கரோனாவால் 98,274 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருட்செல்வா் மொழிபெயா்ப்பு விருதாளா்கள் அறிவிப்பு: அக்.2-இல் சென்னையில் விருது வழங்கும் விழா

ரூ. 2 லட்சம் கோடி முதலீட்டுக்கு வழி வகுத்துள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம்: நிா்மலா சீதாராமன்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் வண்ணப் புகைப்படம்: பிகாா் தோ்தலில் அறிமுகம்

2002, 2005-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியல் அடிப்படையில் தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தம்: தோ்தல் துறை முடிவு

திருவண்ணாமலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT