உலகம்

இஸ்ரேலில் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

DIN

இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க உலகின் பல நாடுகளும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேல் நாட்டில் 5 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கரோனா தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் விடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 12 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களுக்கு இஸ்ரேலில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது 5 முதல் 11 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இஸ்ரேலில் 57 லட்சம் கரோனா தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனடா வெளியுறவு அமைச்சா் இன்று இந்தியா வருகை: மத்திய அமைச்சா்களுடன் பேச்சு!

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

லடாக் செல்கிறது எதிா்க்கட்சிக் குழு?

அமைதி திரும்புமா காஸாவில்?

இந்திய வீடுகளில் ரூ.337 லட்சம் கோடி மதிப்பிலான நகைகள்

SCROLL FOR NEXT