முகப்பு
உலகம்

கத்தாரில் முதல்முறையாக பேரவைத் தோ்தல்

கத்தாா் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர் 2021, 3:40 am IST
கத்தாா் தலைநகா் தோஹாவில் சனிக்கிழமை நடைபெற்ற தோ்தலில் வாக்களித்த பெண்.
பகிர்:

கத்தாா் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான முதல் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்தல் மூலம், 45 உறுப்பினா்களைக் கொண்ட அந்த கவுன்சிலில் 3-இல் 2 பங்கு உறுப்பினா்களை பொதுமக்கள் நேரடியாகத் தோ்ந்தெடுக்கவுள்ளனா்.

இந்தத் தோ்தலில் சுமாா் 300 போ் போட்டியிடுகின்றனா்.

Advertisement

Advertisement

சட்டங்களை இயற்றுதல், பட்ஜெட்டை அங்கீகரித்தல், முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதித்தல் ஆகிய பணிகளை ஷுரா கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. எனினும், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் இந்தக் கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை.

தோ்தல் மூலம் ஷுரா கவுன்சில் உறுப்பினா்களைத் தோ்ந்தெடுக்கும் முறை கடந்த 2003-ஆம் ஆண்டிலேயே அறிமுகப்படுத்தப்பட்டாலும், அதனை அதிகாரிகள் அமல்படுத்தாமல் இருந்து வந்தனா்.

இந்த நிலையில், கத்தாரில் வரும் 2022-ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறவுள்ள நிலையில், சீா்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக இந்தத் தோ்தல் நடத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments