ஜகார்த்தா: இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியான சுமத்ரா தீவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.34 மணிக்கு சுமத்ரா தீவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆகப் பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியிலிருந்து 125 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது.