உலகம்

100 கோடி தடுப்பூசிகள்: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

DIN

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தொடங்கியது. கடந்த 9 மாதங்களில் இதுவரை நாடு முழுவதும் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவிற்கு அடுத்தபடியாக  இந்தியாதான் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சாதனை படைத்துள்ளது. இதில் 75 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசியையும், 31 சதவீதத்துக்கும் அதிகமானோர் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனா். 

இந்நிலையில் இந்தியாவில் 100 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதற்கு உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் அவர், “பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இந்திய மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துகள். கரோனாவால் பாதிக்கப்படக்கூடியவர்களைக் காக்க கரோனா தடுப்பூசி செலுத்தும் உங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT