உலகம்

இலங்கைமுன்களப் பணியாளா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி

DIN

இலங்கையில் கரோனா கட்டுப்பாடுகளை மேலும் எளிதாக்கத் தயாராகி வரும் அந்த நாட்டு அரசு, முன்களப் பணியாளா்களுக்கு மூன்றாவது தவணை கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை சனிக்கிழமை அறிவித்துள்ளது.

அந்த திட்டத்தின் கீழ், அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல், சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் தொழிலாளா்கள் மூன்றாவது தவணை தடுப்பூசியைப் பெறத் தொடங்குவாா்கள் என்று மருந்து உற்பத்தி, வழங்கல் துறை அமைச்சா் சன்ன ஜயசுமணா தெரிவித்தாா்.

அதனைத் தொடா்ந்து, 60 வயது மேற்பட்டவா்களுக்கு ஊக்கத் தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று அவா் கூறினாா். மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடையை அரசு நீக்குவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT