சுந்தர் பிச்சை 
உலகம்

வீட்டிலிருந்து பணிபுரியும் வசதி அடுத்தாண்டு வரை நீட்டிப்பு: கூகுள் அறிவிப்பு

பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.

DIN

பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று காரணமாக வீட்டிலிருந்து பணிபுரியும் வசதியை குகூள் அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. இருப்பினும், உலகம் முழுவதும் உள்ள கூகுள் பணியாளர்கள் தாங்களாக விருப்பப்பட்டுக் கூட அலுவலகத்திற்கு வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இது ஜனவரி 10ஆம் தேதி வரை தொடரும் என்றும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு எப்போதிலிருந்து வரலாம் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உள்ளூர் அலுவலகத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "உலகின் பல்வேறு பகுதிகளில் பல அலுவலகங்கள் ஏற்கனவே திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆயிரக்கணக்கான குகூள் பணியாளர்கள் தாங்களாக அலுவலகத்திற்கு மீண்டும் வருவதை வரவேற்கிறோம்.

நாம் நினைத்தை விட நம்முடைய பயணம் சவால் நிறைந்ததாகவும் நீண்டதாகவும் இருக்கும் என நினைக்கிறேன். இருப்பினும், இதை அனைவரும் ஒன்றிணைந்து கடப்போம் என நம்பிக்கையுடன் தெரிவித்து கொள்கிறேன். அலுவலகத்திற்கு வர விருப்பம் தெரிவிப்பவர்கள் 30 நாள்களுக்கு முன்பு தெரிவிக்க வேண்டும். அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அவர்களுக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும். 

பேஸ்புக், குகூள் உள்ளிட்ட நிறுவனங்கள் அலுவலகத்திலிருந்து பணிபுரியும் முறையை அமல்படுத்த திட்டமிட்டருந்தது. ஆனால், கரோனா காரணமாக இத்திட்டம் தாமதமாகிவருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் ஆறுகளில் காயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நாகை காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் துரிதமாக இயக்கம் செய்யப்படுகிறது: உணவுத் துறை அமைச்சா்

குழந்தைகள் நலன் தொடா்புடைய துறைகளுக்கான கூராய்வு கூட்டம்

SCROLL FOR NEXT