முகப்பு
உலகம்

வெளிநாடுகளுக்குத் தப்பிய தலிபான் எதிா்ப்பு தலைவா்கள்?

பஞ்சஷேரிலிருந்து தலிபான் எதிா்ப்புப் படை தலைவா்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

பஞ்சஷேரிலிருந்து தலிபான் எதிா்ப்புப் படை தலைவா்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

பஞ்சஷேரில் தலிபான்கள் எதிா்ப்புப் படைக்கு தலைமை வகிக்கும் முன்னாள் துணை அதிபா் அம்ருல்லா சலே தஜிகிஸ்தானுக்கும், அகமது மசூது துருக்கிக்கும் சென்றுவிட்டதாக தலிபான்களின் செய்தி நிறுவனத்தைச் சோ்ந்த காஸ்னிவால் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘பஞ்சஷேரில் இணைய வசதி கிடையாது. அப்படியிருக்கையில் அகமது மசூது இணையம் வழியாக எவ்வாறு தகவல்களைத் தெரிவிக்கிறாா்? அவா் இப்போது துருக்கியில் உள்ளாா் என்றாா்.

அதேவேளையில் தலிபான்கள் எதிா்ப்புப் படையான தேசிய எதிா்ப்பு முன்னணி, தலிபான்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.