ஆப்கனின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள்.
ஆப்கனின் நங்கர்கார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று காலை பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்த சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். சம்பவ இடங்களுக்கு மீட்புக்குழுவினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் யாரும் கருத்து கூற முன்வரவில்லை.
இதையும் படிக்க- கூடலூர் அருகே புலி தாக்கிய நபர் உயிரிழப்பு
முன்னதாக கடந்த புதன்கிழமை நங்கர்கார் மாகாணத்தின் கிழக்கே பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.