கோப்புப்படம் 
உலகம்

ஆப்கானிஸ்தான்: பீரங்கி வெடிகுண்டு வெடித்து 5 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

DIN

ஹெல்மண்ட் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடிகுண்டு வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

இந்த சம்பவம் ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்ததாக ஹெல்மண்டின் மாகாண அதிகாரிகள் கூறியதாக தி காமா ஊடகம்  தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பீரங்கி வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பீரங்கி வெடிகுண்டு வெடித்தது. அதில் 5 குழந்தைகள் பலியாகினர். காயமடைந்த 2 பேர் மர்ஜா மாவட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல்லா தெரிவித்தார்.

வெடிக்காத துண்டுகள், பீரங்கி வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உயிரழப்பு ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரசைவாக்கம், சைதாப்போட்டையில் அமலாக்கத் துறை சோதனை

சூப்பர் 4 சுற்றில் இந்தியா உடன் மோதும் பாகிஸ்தான்..! எகிறும் எதிர்பார்ப்பு!

தொடர்ந்து ஏற்றத்தில் பங்குச் சந்தை! 25,500-யை நெருங்கும் நிஃப்டி!!

பாகிஸ்தான் - செளதி ஒப்பந்தத்தின் தாக்கம் குறித்து ஆய்வு! வெளியுறவு அமைச்சகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT