முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான்: பீரங்கி வெடிகுண்டு வெடித்து 5 குழந்தைகள் பலி

ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

Updated On : 2 ஏப்ரல் 2022, 12:39 pm IST
கோப்புப்படம்
பகிர்:

ஹெல்மண்ட் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானில் தென்கிழக்கு ஹெல்மண்ட் மாகாணத்தில் பீரங்கி வெடிகுண்டு வெடித்ததில், 5 குழந்தைகள் பலியாகினர் மற்றும் 2 பேர்  காயமடைந்தனர்.

இந்த சம்பவம் ஹெல்மண்ட் மாகாணத்தின் மர்ஜா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடந்ததாக ஹெல்மண்டின் மாகாண அதிகாரிகள் கூறியதாக தி காமா ஊடகம்  தெரிவித்துள்ளது.

குழந்தைகள் பீரங்கி வெடிகுண்டுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது பீரங்கி வெடிகுண்டு வெடித்தது. அதில் 5 குழந்தைகள் பலியாகினர். காயமடைந்த 2 பேர் மர்ஜா மாவட்ட சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அப்துல்லா தெரிவித்தார்.

Advertisement

Advertisement

வெடிக்காத துண்டுகள், பீரங்கி வெடிகுண்டுகள் மற்றும் ராக்கெட்டுகள் மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு உயிரழப்பு ஏற்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments