ஆப்கனில் கையெறி குண்டு தாக்குதல்: 6 பேர் படுகாயம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மசூதி மீது நடத்தப்பட்ட கையெறி குண்டு தாக்குதலில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சியமைத்ததிலிருந்து தீவிரவாதத் தாக்குதல்கள் வெகுவாகக் குறைந்துள்ளன. எனினும் ஆங்காங்கே செயல்பட்டு வரும் அரசுக்கு எதிரான குழுக்கள் அவ்வப்போது திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இதையும் படிக்க | ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்?
Advertisement
Advertisement
இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூலின் புல்-இ-கிஸ்தி மசூதியில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல் 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த கையெறி குண்டு தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.