புது தில்லி: சீனாவின் வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 6 மாதங்களில் ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது மெல்ல குறைந்து வந்த நிலையில், மீண்டும் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம், சீனாவின் ஊரக பகுதியில் வேலையில்லாத் திண்டாட்டம் 5.5 சதவீதமாக இருந்தது.
சீனாவில் தற்போது வேலையில்லாத் திண்டாட்டம் சமாளிக்கும் அளவிலேயே இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்தாலும், கரோனா பொதுமுடக்கம் காரணமாக நாள்தோறும் வேலையிழக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
குறிப்பாக 16 வயது முதல் 24 வயதுடைய வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.