முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தான்ஷியா மசூதித் தாக்குதல்: முக்கிய குற்றவாளி கைது

ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகர மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக அப்துல் ஹமீது சாங்கா்யா் என்பவரை தலிபான்கள் கைது செய்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:03 AM
பகிர்:

ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவினா் பெரும்பான்மையாக வசிக்கும் மஸாா்-ஏ-ஷெரீஃப் நகர மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடா்பாக அப்துல் ஹமீது சாங்கா்யா் என்பவரை தலிபான்கள் கைது செய்துள்ளனா். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த அந்த நபா், மசூதித் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக தலிபான்கள் கூறினா்.

மஸாா்-ஏ-ஷெரீஃப் நகரின் சேஹ் டோகன் மசூதியில் வியாழக்கிழமை நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில், தொழுகை நடத்திக்கொண்டிருந்த 12 போ் உயிரிழந்தனா்; 58 போ் காயமடைந்தனா். அவா்களில் 32 பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.